இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1010ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا‏.‏ قَالَ فَيُسْقَوْنَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

(மக்களுக்கு) வறட்சி ஏற்படும்போதெல்லாம் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் வாயிலாக (அல்லாஹ்விடம்) மழை வேண்டக்கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள்:

“அல்லாஹும்ம இன்னா குன்னா நதவஸ்ஸலு இலைக்க பிநபிய்யினா ஃபதஸ்கீனா, வஇன்னா நதவஸ்ஸலு இலைக்க பிஅம்மி நபிய்யினா ஃபஸ்கினா”

(யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் முன்னிலைப்படுத்தி (மழை) வேண்டினோம்; நீ எங்களுக்கு மழையை பொழிந்தாய். மேலும், நாங்கள் எங்கள் நபியின் சிறிய தந்தையை உன்னிடம் முன்னிலைப்படுத்தி வேண்டுகிறோம்; எனவே எங்களுக்கு நீ மழையை பொழிவாயாக!)

என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு மழை பொழிவிக்கப்படும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح