சல்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய், பாலாடைக்கட்டி மற்றும் உரோமங்கள் (அணிவது அல்லது பயன்படுத்துவது) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் தன் வேதத்தில் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால் ஆகும்; அல்லாஹ் தன் வேதத்தில் எதை ஹராமாக்கினானோ அது ஹராம் ஆகும்; மேலும் எதைப் பற்றி அவன் மௌனம் சாதித்தானோ, அது அவன் மன்னித்தவற்றில் உள்ளதாகும் (அதாவது, அனுமதிக்கப்பட்டவை)."