இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரவின் ஆரம்பத்தில் 'நபீத்' தயாரிக்கப்படும். அவர்கள் அதனை (தயாரிக்கப்பட்டதற்கு) மறுநாள் காலையிலும், (அதே) இரவிலும், (அதற்கு அடுத்த) பகலிலும், (அதற்குப் பின்னான) இரவிலும், (மூன்றாம்) பகலில் அஸ்ர் வரையிலும் அருந்துவார்கள். அதில் ஏதேனும் மீதமிருந்தால், அவர்கள் அதைத் தமது பணியாளருக்குப் பருகக் கொடுப்பார்கள்; அல்லது அதை ஊற்றிவிடும்படி கட்டளையிடுவார்கள்."