ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாத்திரங்களை மூடுங்கள்; தண்ணீர்த் துருத்திகளின் வாய்களைச் சுருக்கி (க்கட்டி) விடுங்கள்; கதவுகளை மூடுங்கள்; மேலும் விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான் தண்ணீர்த் துருத்தியை அவிழ்க்க மாட்டான்; கதவைத் திறக்க மாட்டான்; பாத்திரங்களையும் திறக்க மாட்டான். உங்களில் ஒருவர் (தம் பாத்திரத்தை மூடுவதற்கு) எதனையும் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவர் அதன் மீது ஒரு குச்சியேனும் குறுக்காக வைத்து, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லட்டும். ஏனெனில், (எலி போன்ற) சிறு பிராணி வீட்டாருடன் சேர்த்து வீட்டையே எரித்துவிடும்."
குதைபா அவர்கள் தாம் அறிவித்த ஹதீஸில் "கதவுகளை மூடுங்கள்" என்பதைக் குறிப்பிடவில்லை.