இப்னு அபீ குஸாமா (ரழி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாம் பயன்படுத்தும் ருக்யா, நாம் மேற்கொள்ளும் சிகிச்சைகள் மற்றும் நாம் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுக்குமா என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் (ஸல்), "அவையும் அல்லாஹ்வின் விதியைச் சார்ந்தவையே" என்று கூறினார்கள்.