அபூ கப்ஷா அல்-அன்மாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தலையின் உச்சியிலும், தங்களின் இரண்டு தோள்களுக்கு மத்தியிலும் இரத்தம் குத்தி (ஹிஜாமா) எடுப்பார்கள். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “யாரேனும் இந்த இரத்தத்தை வெளியேற்றினால், அவர் வேறு எதற்கும் எந்த சிகிச்சையும் செய்யாவிட்டாலும், அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.”