حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றபோதெல்லாம், முஅவ்விதாத் (சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன் நாஸ்) ஓதி, பின்னர் தம் உடலில் ஊதுவார்கள். அவர்கள் கடுமையாக நோயுற்றபோது, நான் (இந்த இரண்டு சூராக்களையும்) ஓதி, அதன் பரக்கத்தை நாடி, அவர்களுடைய கைகளை அவர்களுடைய உடம்பில் தடவி விடுவேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விதாத்' (பாதுகாவல் கோரும்) அத்தியாயங்களை தங்கள் மீது ஓதி ஊதிக்கொள்வார்கள். அவர்களுடைய நோய் தீவிரமடைந்தபோது, நான் அவர்கள் மீது அவற்றை ஓதி, அவர்களுடைய கையின் பரக்கத்தை நாடி, அவர்களுடைய கரத்தாலேயே அவர்களைத் தடவிவிடுவேன்."