அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (முன்பு கூறியதற்கு) பிறகு (ஒரு சந்தர்ப்பத்தில்) கூறக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோயுற்ற (கால்நடைகளை உடைய)வர், ஆரோக்கியமான (கால்நடைகளை உடைய)வரிடம் (தமது கால்நடைகளை) கொண்டு செல்ல வேண்டாம்.'
(இதற்குப்) பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (தொற்றுநோய் குறித்துத் தாம் முன்பு அறிவித்த) முதல் ஹதீஸை மறுத்தார்கள். நாங்கள், '(முன்பு) தாங்கள் 'தொற்றுநோய் என்பது கிடையாது' என்று அறிவிக்கவில்லையா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அபிசீனிய மொழியில் (ஏதோ) பேசினார்கள்.
அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த ஹதீஸைத் தவிர வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்ததாக நான் கண்டதில்லை.'