இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5771ஸஹீஹுல் புகாரி
وَعَنْ أَبِي سَلَمَةَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، بَعْدُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ ‏ ‏‏.‏ وَأَنْكَرَ أَبُو هُرَيْرَةَ حَدِيثَ الأَوَّلِ قُلْنَا أَلَمْ تُحَدِّثْ أَنَّهُ لاَ عَدْوَى فَرَطَنَ بِالْحَبَشِيَّةِ‏.‏ قَالَ أَبُو سَلَمَةَ فَمَا رَأَيْتُهُ نَسِيَ حَدِيثًا غَيْرَهُ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நோயுற்ற (கால்நடைகளை உடைய)வர், ஆரோக்கியமான (கால்நடைகளை உடைய)வரிடம் (அவற்றை) கொண்டு செல்ல வேண்டாம்."

(இதற்குப்) பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (தொற்றுநோய் குறித்துத் தாம் முன்பு அறிவித்த) முதல் ஹதீஸை மறுத்தார்கள். நாங்கள், "(முன்பு) தாங்கள் 'தொற்றுநோய் என்பது கிடையாது' என்று அறிவிக்கவில்லையா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் எத்தியோப்பியா மொழியில் (ஏதோ) பேசினார்கள்.

அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இந்த ஹதீஸைத் தவிர வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்ததாக நான் கண்டதில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح