அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள் ஒரு புதிய ஆடையை அணிந்தபோது, “என் மறைவிடத்தை நான் மறைத்துக் கொள்வதற்கும், என் வாழ்வில் நான் அழகுபடுத்திக் கொள்வதற்கும் எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ மா உவாரீ பிஹீ அவ்ரதீ, வ அதஜம்மலு பிஹீ ஃபீ ஹயாதீ)” என்று கூறினார்கள்.
பிறகு, நைந்துபோன (பழைய) ஆடையை எடுத்து அதைத் தர்மம் செய்தார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 'யார் ஒரு புதிய ஆடையை அணிந்து, "என் மறைவிடத்தை நான் மறைத்துக் கொள்வதற்கும், என் வாழ்வில் நான் அழகுபடுத்திக் கொள்வதற்கும் எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ மா உவாரீ பிஹீ அவ்ரதீ, வ அதஜம்மலு பிஹீ ஃபீ ஹயாதீ)" என்று கூறிவிட்டு, பின்னர் நைந்துபோன (பழைய) ஆடையை எடுத்து தர்மமாகக் கொடுக்கிறாரோ, அவர் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் அல்லாஹ்வின் காவலிலும், அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், அல்லாஹ்வின் மறைப்பிலும் (தீமைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு) இருப்பார்.'”