ஜுவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதபோது அல்லது தொழுது முடித்த பிறகு என்னைக் கடந்து சென்றார்கள். (முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆனால், இதில் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"அல்லாஹ்வின் படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ் தூயவன்; அவனுடைய திருப்திக்குரிய அளவுக்கு அல்லாஹ் தூயவன்; அவனுடைய அரியாசனத்தின் எடை அளவுக்கு அல்லாஹ் தூயவன்; அவனுடைய வார்த்தைகளைப் பதிவு செய்யும் மையின் அளவுக்கு அல்லாஹ் தூயவன்."