அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பாரசீகமும் ரோமாபுரியும் உங்களுக்கு வெற்றி கொள்ளப்படும்போது நீங்கள் எத்தகைய மக்களாக இருப்பீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டவாறே நாங்கள் (நடந்து கொள்வோம் அல்லது) கூறுவோம்" என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லது அதற்கு மாற்றமாக (நடந்து கொள்வீர்கள்). நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவீர்கள்; பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள்; பின்னர் ஒருவருக்கொருவர் (பிணங்கிக்கொண்டு) புறக்கணிப்பீர்கள்; பின்னர் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவீர்கள்; அல்லது இது போன்ற ஒன்றைச் செய்வீர்கள். பின்னர் ஏழை முஹாஜிர்களிடம் சென்று, அவர்களில் சிலரை மற்றவர்கள் மீது (ஆதிக்கம் செலுத்த) ஏவிவிடுவீர்கள்."