حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் துருக்கியர்களுடன் போர் புரியும் வரை மறுமை நாள் ஏற்படாது; அவர்கள் சிறிய கண்களையும், சிவந்த முகங்களையும், தட்டையான மூக்குகளையும் உடைய மக்கள். அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்கள் போன்று தோற்றமளிக்கும். முடியால் செய்யப்பட்ட காலணிகளை உடைய மக்களுடன் நீங்கள் போர் புரியும் வரை மறுமை நாள் ஏற்படாது."
حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا خُوزًا وَكَرْمَانَ مِنَ الأَعَاجِمِ، حُمْرَ الْوُجُوهِ، فُطْسَ الأُنُوفِ، صِغَارَ الأَعْيُنِ، وُجُوهُهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ، نِعَالُهُمُ الشَّعَرُ . تَابَعَهُ غَيْرُهُ عَنْ عَبْدِ الرَّزَّاقِ.
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அரபியர் அல்லாதவர்களிலிருந்து குத் மற்றும் கிர்மான் (மக்களுடன்) நீங்கள் போர் புரியும் வரை மறுமை நாள் ஏற்படாது. அவர்கள் சிவந்த முகங்களையும், தட்டையான மூக்குகளையும், சிறிய கண்களையும் உடையவர்களாக இருப்பார்கள்; அவர்களுடைய முகங்கள் தட்டையான கேடயங்கள் போன்று தோற்றமளிக்கும், மேலும் அவர்களுடைய காலணிகள் முடியால் ஆனவையாக இருக்கும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தட்டப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களையுடைய மக்களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது; மேலும், முடியாலான காலணிகளை அணிபவர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மயிராலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு கூட்டத்தினருடன் நீங்கள் போர் புரியும் வரை யுகமுடிவு நாள் வராது; மேலும், சிறிய கண்களையும் அகன்ற, தட்டையான மூக்குகளையும் உடைய ஒரு கூட்டத்தினருடன் நீங்கள் போர் புரியும் வரை யுகமுடிவு நாள் வராது.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிர்காலத்தில், முடியால் ஆன காலணிகளை அணிந்திருக்கும், மேலும் தட்டையான கேடயங்களைப் போன்ற முகங்களையும், சிவந்த நிறத்தையும், சிறிய கண்களையும் கொண்ட ஒரு கூட்டத்திற்கு எதிராக நீங்கள் போர் புரிவீர்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முடிகளால் ஆன காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. மேலும், தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا صِغَارَ الأَعْيُنِ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
“மயிரால் ஆன காலணிகளை அணியும் மக்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. மேலும், சிறு கண்களை உடைய மக்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.”