இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2978ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ،
بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ، يَخْطُبُ قَالَ ذَكَرَ عُمَرُ
مَا أَصَابَ النَّاسُ مِنَ الدُّنْيَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَظَلُّ الْيَوْمَ
يَلْتَوِي مَا يَجِدُ دَقَلاً يَمْلأُ بِهِ بَطْنَهُ ‏.‏
நுஃமான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியபோது கூறியதாவது:
(ஹஜ்ரத்) உமர் (ரலி) அவர்கள், இவ்வுலகப் பொருட்களிலிருந்து மக்களுக்குக் கிடைத்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தம் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு மட்டமான பேரீச்சம்பழத்தைக் கூட பெற முடியாமல் நாள் முழுவதும் (பசியால்) துடித்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح