நபித்தோழர்களில் ஒருவரான அதிய்யா அஸ்-ஸஃதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தீங்குள்ள காரியங்களில் (சிக்கிக்கொள்வோமோ என்ற) அச்சத்தினால், தீங்கற்ற காரியங்களையும் விட்டுவிடும் வரை ஓர் அடியான் இறையச்சமுடையோரின் (முத்தகீன்களின்) நிலையை அடைய மாட்டான்."