حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ ـ هُوَ ابْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ ـ هُوَ ابْنُ مُعَاذٍ ـ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُومُوا إِلَى سَيِّدِكُمْ ". فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ ". قَالَ فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ. قَالَ " لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ الْمَلِكِ ".
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"பனூ குறைளா குலத்தினர் ஸஅத் (அதாவது இப்னு முஆத்) அவர்களின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆளனுப்பினார்கள். அவர் அருகிலேயே இருந்தார். அவர் ஒரு கழுதையின் மீது வந்தார். அவர் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று கூறினார்கள். அவர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்தார்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள், 'இவர்கள் உனது தீர்ப்புக்குக் கட்டுப்பட்டுள்ளார்கள்' என்று கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி), 'போரிடுவோர் கொல்லப்பட வேண்டும்; சந்ததிகள் சிறைபிடிக்கப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'பேரரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பைக் கொண்டே அவர்களிடத்தில் நீர் தீர்ப்பளித்துள்ளீர்' என்று கூறினார்கள்."
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَ أَهْلُ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى سَعْدٍ، فَأَتَى عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ " قُومُوا إِلَى سَيِّدِكُمْ ـ أَوْ ـ خَيْرِكُمْ ". فَقَالَ " هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ ". فَقَالَ تَقْتُلُ مُقَاتِلَتَهُمْ وَتَسْبِي ذَرَارِيَّهُمْ. قَالَ " قَضَيْتَ بِحُكْمِ اللَّهِ ". وَرُبَّمَا قَالَ " بِحُكْمِ الْمَلِكِ ".
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(பனூ) குறைழா குலத்தினர் சஅத் பின் முஆத் (ரழி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக சம்மதித்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் சஅத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். அவர் ஒரு கழுதையில் (ஏறி) வந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், "உங்கள் தலைவருக்காக அல்லது உங்களில் சிறந்தவருக்காக எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (சஅத் (ரழி) அவர்களிடம்), "இவர்கள் (அதாவது (பனூ) குறைழா குலத்தினர்) உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக சம்மதித்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். சஅத் (ரழி) அவர்கள், "அவர்களுடைய (ஆண்) போர் வீரர்களைக் கொன்றுவிடுங்கள்; அவர்களுடைய சந்ததியினரைச் சிறைபிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் தீர்ப்புக்கிணங்கவே தீர்ப்பளித்திருக்கிறீர்கள்" அல்லது "அரசனின் தீர்ப்புக்கிணங்க (தீர்ப்பளித்திருக்கிறீர்கள்)" என்று கூறினார்கள்.
குரைழா (கோத்திரத்தின்) மக்கள் ஸஅத் (ரழி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்காக (ஸஅத் (ரழி) அவர்களுக்காக) ஆளனுப்பினார்கள்; அவரும் வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தவர்களிடம்), "உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்" என்றார்கள். அல்லது "உங்களில் சிறந்தவருக்காக" (என்று கூறினார்கள்). ஸஅத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அருகில் அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), "இந்த மக்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்" என்று கூறினார்கள். ஸஅத் (ரழி) அவர்கள், "ஆகவே, அவர்களின் போர்வீரர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும், அவர்களின் பெண்களும் குழந்தைகளும் கைதிகளாகப் பிடிக்கப்பட வேண்டும் என்றும் நான் தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பின்படி தீர்ப்பளித்துள்ளீர்கள்" என்று கூறினார்கள்.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
குறைழா குலத்தினர் ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்களின் தீர்ப்பை ஏற்று (தங்கள் கோட்டைகளிலிருந்து) இறங்கி வந்தனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள்; அவர் ஒரு கழுதையில் (ஏறி) வந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், "உங்கள் தலைவரை -அல்லது உங்களில் சிறந்தவரை- (வரவேற்க) எழுந்து செல்லுங்கள்" என்று கூறினார்கள். பின்னர் (ஸஃத் அவர்களிடம்), "இவர்கள் உமது தீர்ப்பை ஏற்று இறங்கி வந்துள்ளனர்" என்று கூறினார்கள்.
(அதற்கு) ஸஃத் (ரழி), "அவர்களின் போரிடுவோரைக் கொன்றுவிட வேண்டும்; அவர்களின் சந்ததிகளைச் சிறைபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஷுஅபா கூறுகிறார்:) ஒருவேளை "பேரரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே (தீர்ப்பளித்துள்ளீர்கள்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.
இப்னுல் முஸன்னா (தம் அறிவிப்பில்), "ஒருவேளை 'பேரரசனின் தீர்ப்புப்படியே' என்று கூறியிருக்கலாம்" எனும் வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை.
சிலர் (பனூ குரைளா குலத்தார்) ஸஃத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்று இறங்கினர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஸஃத் அவர்களுக்கு) ஆள் அனுப்பினார்கள். அவர் ஒரு கழுதையின் மீது வந்தார். அவர் பள்ளிவாசலுக்கு அருகில் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் சிறந்தவரிடம் செல்லுங்கள்" அல்லது "உங்கள் தலைவரிடம் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு (நபி (ஸல்) அவர்கள்), "ஸஃத் அவர்களே! நிச்சயமாக இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்று இறங்கியுள்ளார்கள்" என்றார்கள். அதற்கு ஸஃத் (ரலி), "அவர்களில் போரிடும் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்; அவர்களின் சந்ததிகள் கைதிகளாக்கப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தீர்ப்பப்படியே தீர்ப்பளித்துள்ளீர்" அல்லது "பேரரசனின் தீர்ப்பப்படியே தீர்ப்பளித்துள்ளீர்" என்று கூறினார்கள்.