ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உயர்ந்தவனும் மகிமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் கூற்றான, 'பூமி வேறு பூமியாகவும், வானங்கள் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும் அந்நாளில்' (அல்-குர்ஆன் 14:48) (என்ற வசனத்தின் பொருள் குறித்து), '(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) அந்நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்கள் சிராத் மீது இருப்பார்கள்' என்று கூறினார்கள்.