இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2791ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ
مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏{‏
يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ وَالسَّمَوَاتُ‏}‏ فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ
‏ ‏ عَلَى الصِّرَاطِ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உயர்ந்தவனும் மகிமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் கூற்றான, 'பூமி வேறு பூமியாகவும், வானங்கள் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும் அந்நாளில்' (அல்-குர்ஆன் 14:48) (என்ற வசனத்தின் பொருள் குறித்து), '(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) அந்நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்கள் சிராத் மீது இருப்பார்கள்' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح