அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்விடம் நூறு கருணைப் பாகங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கருணைப் பாகத்தை அவன் ஜின்கள், மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஊர்வன (மற்றும் பூச்சியினங்கள்) மத்தியில் இறக்கினான். அதனைக் கொண்டே அவை ஒன்றையொன்று நேசிக்கின்றன; ஒன்றின் மீது ஒன்று கருணை காட்டுகின்றன; காட்டுமிருகம்கூட தன் குட்டியிடம் பாசம் காட்டுகிறது. மேலும், அல்லாஹ் தொண்ணூற்றொன்பது கருணைப் பாகங்களை (மறுமைக்காக) பிற்கடுத்தி வைத்துள்ளான். அவற்றைக் கொண்டு அவன் மறுமை நாளில் தன் அடியார்களுக்குக் கருணை காட்டுவான்.”