அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் மறுமை நாளில் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரின் தலைவன் ஆவேன். மேலும், மண்ணறை எவருக்காக முதலில் பிளக்கப்படுமோ அவரும் நானே. மேலும், நானே முதல் பரிந்துரையாளராகவும், பரிந்துரை ஏற்கப்படுபவராகவும் இருப்பேன்.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரில் முதன்மையானவனாகவும், பூமி பிளந்து முதன்முதலில் வெளிவருபவனாகவும், முதல் பரிந்துரைப்பவனாகவும், மேலும் முதன்முதலில் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுபவனாகவும் இருப்பேன்.