حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ .
அலி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "இம்ரானின் மகள் மர்யம் (அக்காலப்) பெண்களில் சிறந்தவர் ஆவார்; மேலும் கதீஜா (இக்காலப்) பெண்களில் சிறந்தவர் ஆவார்."
அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரழி) அவர்கள், அலீ (ரழி) அவர்கள் கூஃபாவில் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அக்காலத்துப் பெண்களிலேயே சிறந்தவர் இம்ரானின் மகள் மர்யம் (அலை) அவர்களும், அக்காலத்துப் பெண்களிலேயே சிறந்தவர் குவைலிதின் மகள் கதீஜா (ரழி) அவர்களும் ஆவார்கள். அபூ குரைப் அவர்கள் கூறினார்கள், வக்கீஃ அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி சுட்டிக்காட்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உலகப் பெண்களில் சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் (ரழி) ஆவார், மேலும் உலகப் பெண்களில் சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார்."