இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5359ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ هِنْدُ بِنْتُ عُتْبَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا قَالَ ‏ ‏ لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஹிந்த் பின்த் உத்பா வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அபூசுஃப்யான் ஒரு கஞ்சரான மனிதர். அவருக்குரியதிலிருந்து எங்கள் குடும்பத்தாருக்கு நான் உணவளிப்பது என் மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(குற்றம்) இல்லை; ஆனால் நியாயமான முறையில் (செலவு செய்)" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح