ஹிந்த் பின்த் உத்பா வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அபூசுஃப்யான் ஒரு கஞ்சரான மனிதர். அவருக்குரியதிலிருந்து எங்கள் குடும்பத்தாருக்கு நான் உணவளிப்பது என் மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(குற்றம்) இல்லை; ஆனால் நியாயமான முறையில் (செலவு செய்)" என்று கூறினார்கள்.