இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

593ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها، قالت‏:‏ كان لأبي بكر الصديق رضي الله عنه غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوماً بشئ، فأكل منه أبو بكر، فقال له الغلام‏:‏ تدرى ما هذا‏؟‏ فقال أبو بكر‏:‏ ما هو‏؟‏ قال‏:‏ كنت تكهنت لإنسان فى الجاهلية وما أحسن الكهانة إلا أني خدعته فلقيني، فأعطاني بذلك هذا الذى أكلت منه، فأدخل أبو بكر يده فقاء كل شئ فى بطنه” ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அபூபக்ரு (ரழி) அவர்களுக்கு ஓர் அடிமை இருந்தார். அவர் கொண்டுவரும் வருமானத்திலிருந்து அபூபக்ரு (ரழி) அவர்கள் சாப்பிடுவது வழக்கம். ஒருநாள், அவர் ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தார். அதிலிருந்து அபூபக்ரு (ரழி) அவர்கள் சிறிதளவு சாப்பிட்டதும், அந்த அடிமை, “இது எங்கிருந்து கிடைத்தது என்று தங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அபூபக்ரு (ரழி) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் பதிலளித்தார்: நான் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில்) ஒரு மனிதருக்காகக் குறி கூறினேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாததால், நான் அவரை ஏமாற்றிவிட்டேன். இன்று அவர் என்னைச் சந்தித்து, அதற்காக (நான் குறி சொன்னதற்காக) இந்தக் கூலியைக் கொடுத்தார். அதிலிருந்துதான் தாங்கள் சாப்பிட்டீர்கள். இதைக் கேட்டதும், அபூபக்ரு (ரழி) அவர்கள் தமது கையை வாய்க்குள் நுழைத்து, தாம் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டார்கள்.

அல்-புகாரி.