இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், "{அல்-குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிக் கொண்டவர்கள்}" (அல்-ஹிஜ்ர் 15:91) என்ற இறைவசனம் குறித்துக் கூறியதாவது:
"அவர்கள் வேதக்காரர்கள்தாம். (தங்களுக்கு அருளப்பட்ட) வேதத்தை அவர்கள் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, அதன் ஒரு பகுதியை நம்பி, மற்றொன்றை நிராகரித்தார்கள்."