இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பத்ருக் கிணற்றின் அருகே நின்றுகொண்டு, "உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானது என்று கண்டுகொண்டீர்களா?" என்று கேட்டார்கள். மேலும், "நான் இப்போது இவர்களிடம் சொல்வதை நிச்சயமாக இவர்கள் செவியுறுகிறார்கள்" என்றும் கூறினார்கள்.
இது ஆயிஷா (ரழி) அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் கூறினார்கள்: "இப்னு உமர் (ரழி) அவர்கள் தவறிழைத்து விட்டார்கள். மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நான் இவர்களிடம் கூறிக்கொண்டிருந்தது உண்மைதான் என்பதை இப்போது இவர்கள் அறிவார்கள்' என்றுதான் கூறினார்கள்."
பின்னர் அவர்கள், **"{இன்னக்க லா துஸ்மிஉல் மவ்தா}"** - அதாவது "(நபியே!) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்யமுடியாது" என்ற இறைவசனத்தை இறுதிவரை ஓதிக் காட்டினார்கள்.