முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் உஹுதுப் போரின் நாளில் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் ஒரு கோடு போட்ட சால்வையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதைக் கொண்டு நாங்கள் அவர்களுடைய தலையை மூடியபோது அவர்களுடைய கால்கள் வெளிப்பட்டன; அவர்களுடைய கால்களை மூடியபோது அவர்களுடைய தலை வெளிப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டு அவருடைய தலையை மூடுங்கள்; அவருடைய கால்கள் மீது சிறிது இத்கிர் புல்லைப் போடுங்கள்" என்று கூறினார்கள்.