حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ.
ஸஃது (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உஹதுப் போர் நாளன்று நபி (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் குறிப்பிட்டார்கள் (அதாவது, 'என் தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' என்று கூறினார்கள்).
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدٍ، عَنِ ابْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَجْمَعُ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدٍ.
அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சஃத் (ரழி) அவர்களைத் தவிர வேறு எவருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் தமது தந்தையையும் தாயையும் (உனக்காக அர்ப்பணம் என்று கூறிப் புகழ்ந்து) குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.
சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
உஹதுப் போர் நாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் தாய் தந்தையரை (உமக்கு ஈடாகட்டும் என்று கூறி) ஒருசேரக் குறிப்பிட்டார்கள்.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ، قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ .
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களைத் தவிர வேறு எவருக்காகவும், நபி (ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையர் இருவரையும் (அதாவது, 'என் தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' என்று கூறி) ஒருசேரக் குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.