இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2881ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ‏.‏ يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ‏.‏ فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ‏.‏ وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ تَزْفِرُ تَخِيطُ‏.‏
தஃலபா பின் அபீமாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மதீனத்துப் பெண்களுக்கு (கம்பளி) ஆடைகளைப் பங்கிட்டார்கள். அப்போது ஒரு நல்ல ஆடை மீதமிருந்தது. அவருடன் இருந்தவர்களில் சிலர் அவரிடம், "அமீருல் மூமினீன் அவர்களே! இந்த ஆடையை உங்களிடமுள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்விக்குக் கொடுங்கள்" என்று கூறினர். அவர்கள் (இதன் மூலம்) அலீ (ரலி) அவர்களின் மகள் உம்மு குல்தூமை (அதாவது, உமர் (ரலி) அவர்களின் மனைவியான உம்மு குல்தூமை) நாடினர்.

அதற்கு உமர் (ரலி), "உம்மு ஸலீத் (ரலி) அவர்களே இதற்கு அதிகத் தகுதியுடையவர்" என்று கூறினார்கள். உம்மு ஸலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.

"ஏனெனில், அவர் உஹுதுப் போர் நாளில் நமக்காகத் தண்ணீர்ப் பைகளை (பழுதுபார்த்து) தைப்பவராக இருந்தார்" என்று உமர் (ரலி) கூறினார்.

அபூஅப்தில்லாஹ் (இமாம் புகாரி) கூறுகிறார்: (இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள) 'தஸ்ஃபிரு' என்பதற்கு 'தைப்பாள்' என்று பொருளாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح