இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2724ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي،
هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ ‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ أَعَزَّ جُنْدَهُ
وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ وَحْدَهُ فَلاَ شَىْءَ بَعْدَهُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:

"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அஅஸ்ஸ ஜுந்தஹு, வநஸர அப்தஹு, வகலபல் அஹ்ஸாப வஹ்தஹு, பலா ஷைஅ பஹ்தஹு"

பொருள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தன் படைகளுக்குக் கண்ணியம் அளித்தான்; மேலும் தன் அடியாருக்கு (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு) உதவினான்; எதிரிக் கூட்டங்களை அவன் ஒருவனே தோற்கடித்தான்; அவனுக்குப் பிறகு (அதிகாரத்தில் அல்லது இருப்பில்) எதுவும் இல்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح