ஜாபிர் (ரழி) அவர்கள் (வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக) அறிவித்தார்கள்:
ஹுதைபிய்யா தினத்தன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: "இன்று பூமியில் உள்ளவர்களில் நீங்களே சிறந்தவர்கள்." மேலும் ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "எனக்கு பார்வை இருந்திருந்தால், அந்த மரத்தின் இடத்தை நான் உங்களுக்கு காட்டியிருப்பேன்."