நான் ஸலமா (ரலி) அவர்களின் கெண்டைக்காலில் ஒரு காயத்தின் தழும்பைக் கண்டேன். “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கைபர் போரின்போது எனக்கு இக்காயம் ஏற்பட்டது. மக்கள், ‘ஸலமா காயமடைந்துவிட்டார்’ என்று கூறினார்கள். பிறகு நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என் மீது மூன்று முறை (லேசான உமிழ்நீருடன்) ஊதினார்கள். இப்போதுவரை நான் எந்த வலியையும் உணரவில்லை” என்று கூறினார்கள்.