இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3894சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ الرَّازِيُّ، أَخْبَرَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ فَقُلْتُ مَا هَذِهِ قَالَ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَفَثَ فِيَّ ثَلاَثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةِ ‏.‏
யஸீத் பின் அபீ உபைது அவர்கள் கூறியதாவது:

நான் ஸலமா (ரலி) அவர்களின் கெண்டைக்காலில் ஒரு காயத்தின் தழும்பைக் கண்டேன். “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கைபர் போரின்போது எனக்கு இக்காயம் ஏற்பட்டது. மக்கள், ‘ஸலமா காயமடைந்துவிட்டார்’ என்று கூறினார்கள். பிறகு நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என் மீது மூன்று முறை (லேசான உமிழ்நீருடன்) ஊதினார்கள். இப்போதுவரை நான் எந்த வலியையும் உணரவில்லை” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)