ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கைபர் (போர்) நாளில் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் எவருடைய கரங்கள் மூலம் வெற்றியை வழங்குவானோ அத்தகைய ஒரு மனிதரிடம் நிச்சயமாக நான் (போர்க்) கொடியை வழங்குவேன்" என்று கூறியதை அவர்கள் கேட்டார்கள். ஆகவே, தங்களில் யாருக்கு அது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் எழுந்தார்கள். அவர்கள் அனைவரும் தமக்கே அது வழங்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களாக (மறுநாள்) காலையில் (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அலீ எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு, "அவர் கண் வலியால் அவதிப்படுகிறார்" என்று கூறப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவர் (அலீ) அழைத்து வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கண்களில் உமிழ்ந்தார்கள்; உடனே அவருக்கு (முன்பு) எந்தப் பாதிப்பும் இல்லாதிருந்தது போல அந்த இடத்திலேயே குணமடைந்தது.
அப்போது அவர் (அலீ), "அவர்கள் நம்மைப் போல (முஸ்லிம்களாக) ஆகும் வரை நாங்கள் அவர்களுடன் போரிடுவோம்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(பதற்றப்படாமல்) நிதானமாகச் செல்லுங்கள்; அவர்களுடைய களத்தில் நீங்கள் இறங்கும் வரை (பொறுத்திருங்கள்). பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள்; அவர்கள் மீது கடமையானவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் மூலமாக ஒரேயொருவருக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டுவது, (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்."
கைபர் (போர்) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நாளை நான் ஒருவருக்கு இந்தக் கொடியைக் கொடுப்பேன்; அவர் மூலம் (அல்லாஹ்) வெற்றியைத் தருவான்; மேலும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரை நேசிக்கின்றனர்." ஆகவே, மக்கள் இரவு முழுவதும் அந்தக் கொடியை யார் பெறுவார்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்; காலையில் ஒவ்வொருவரும் தானே அந்த நபராக இருக்க வேண்டும் என்று நம்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், "`அலி (ரழி) எங்கே?" `அலி (ரழி) அவர்கள் கண் வலியால் அவதிப்படுவதாக அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, அவர்கள் `அலி (ரழி) அவர்களின் கண்களில் தமது உமிழ்நீரைப் பூசி, அவர்களுக்காக அல்லாஹ்விடம் குணமளிக்கப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் உடனே குணமடைந்தார்கள், அவர்களுக்கு எந்த நோயும் இல்லாதது போல். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கொடியைக் கொடுத்தார்கள். `அலி (ரழி) அவர்கள் கேட்டார்கள், "அவர்கள் எங்களைப் போல் (அதாவது, முஸ்லிம்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிட வேண்டுமா?" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் அவர்களின் பகுதிக்குள் நுழையும் வரை பொறுமையாகவும் அமைதியாகவும் அவர்களிடம் செல்லுங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள், மேலும், அவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளதை அவர்களுக்குத் தெரிவியுங்கள், ஏனெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்கள் மூலம் அல்லாஹ் யாருக்காவது நேர்வழி காட்டினால், அது உங்களுக்குச் செந்நிற ஒட்டகைகளைப் பெற்றிருப்பதை விடச் சிறந்ததாகும்."
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாளை நான் கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன்; அவர் கரங்களின் மூலம் அல்லாஹ் வெற்றியை அருள்வான்." ஆகவே, மக்கள் தங்களில் யாருக்குக் கொடி வழங்கப்படும் என்று விவாதித்தவாறு இரவு முழுவதும் கழித்தார்கள். காலை விடிந்ததும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவரும் தமக்குக் கொடி வழங்கப்படும் என ஆதரவு வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "அலீ பின் அபீ தாலிப் எங்கே?" எனக் கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கண் வலியால் அவதிப்படுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு ஆள் அனுப்பி அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்கள். அலீ (ரழி) அவர்கள் வந்ததும், நபி (ஸல்) அவர்கள் அவருடைய கண்களில் உமிழ்ந்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். உடனே, அவருக்கு எந்த வலியும் இல்லாதது போல் அவர் நலமடைந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடியைக் கொடுத்தார்கள்.
அலீ (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?" எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிதானமாகச் செல்லுங்கள்; அவர்களுடைய களத்தில் நீங்கள் இறங்கியதும், அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள். மேலும், அதில் அவர்கள் மீதுள்ள அல்லாஹ்வின் கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் மூலம் ஒரேயொருவர் நேர்வழி பெற்றால் அது உங்களுக்குச் செந்நிற ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்."
கைபர் (போர்) நாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எவருடைய இரு கரங்களின் மூலம் வெற்றியை அருள்வானோ, அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரை நேசிக்கிறார்கள். அத்தகைய ஒரு மனிதரிடம் நான் நிச்சயமாக இந்தக் கொடியை வழங்குவேன்."
மக்கள் தங்களில் யாருக்கு அது கொடுக்கப்படும் என்று விவாதித்தவாறு அந்த இரவைக் கழித்தார்கள். காலை ஆனதும், மக்கள் அனைவரும் அது தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து சென்றார்கள்.
அவர்கள் (நபியவர்கள்), "அலீ பின் அபீ தாலிப் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் கண் வலியால் அவதிப்படுகிறார்" என்று கூறினார்கள்.
நபியவர்கள் ஆளனுப்பி அவரை (அலீயை) வரவழைத்தார்கள். அவர் கொண்டுவரப்பட்டதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னாரின் கண்களில் உமிழ்ந்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். உடனே அவர், தமக்கு (முன்பு) வலியே இல்லாதிருந்தது போல குணமடைந்தார். நபியவர்கள் அந்தக் கொடியை அவரிடம் வழங்கினார்கள்.
அலீ (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்களைப் போல் (முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடவா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: "நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தை அடையுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள். மேலும், அல்லாஹ்வின் உரிமைகளிலிருந்து அவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களின் மூலம் அல்லாஹ் ஒரு மனிதருக்கு நேர்வழி காட்டுவது, (அரபுலகின் அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்."
وعن العباس سهل بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر: "لأعطين الراية غداً رجلا يفتح الله على يديه، يحب الله ورسوله، ويحبه الله ورسوله" فبات الناس يدوكون ليلتهم أيهم يعطاها. فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم: كلهم يرجو أن يعطاها، فقال: "أين علي بن أبى طالب؟" فقيل: يا رسول الله هو يشتكي عينيه قال: "فأرسلوا إليه" فأتي به ، فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه، ودعا له، فبرأ حتى كأن لم يكن به وجع، فأعطاه الراية. فقال علي رضي الله عنه : يا رسول الله أقاتلهم حتى يكونوا مثلنا؟ فقال: "انفذ على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم إلى الإسلام، وأخبرهم بما يجب عليهم من حق الله تعالى فيه، فوالله لأن يهدي الله بك رجلاً واحداً خير لك من حمر النعم" ((متفق عليه)).
சஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "நாளை நான் இக்கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன்; அவர் மூலமாக அல்லாஹ் வெற்றியளிப்பான்; அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறார்; அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரை நேசிக்கிறார்கள்" என்று கூறினார்கள். மக்களோ, தங்களில் யாருக்கு அக்கொடி வழங்கப்படும் என்று விவாதித்தவாறே அந்த இரவைக் கழித்தனர்.
பொழுது விடிந்ததும் மக்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் அக்கொடி தமக்கே கொடுக்கப்பட வேண்டுமென ஆசைப்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அலி பின் அபீ தாலிப் எங்கே?" என்று கேட்டார்கள். "இறைத்தூதர் அவர்களே! அவர் கண் வலியால் சிரமப்படுகிறார்" என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு ஆள் அனுப்புங்கள்" என்று கூறினார்கள்.
அவர் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரது கண்களில் உமிழ்ந்து, அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவருக்கு (முன்பு) வலியே இருந்திராதது போன்று அவர் குணமடைந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அக்கொடியைக் கொடுத்தார்கள்.
அலி (ரலி) அவர்கள், "இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடவா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தை அடைந்ததும் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள். அதில் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களின் வாயிலாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவது, (அரபகத்தின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.