“ஆயிஷா (ரலி) அவர்களின் முன்னிலையில், ‘அலி (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின்) வஸிய்யத் பெற்றவர்’ என்று கூறப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவரிடம் வஸிய்யத் செய்தார்கள்? (அவர்கள் இறக்கும்போது) நான் அவர்களை என் நெஞ்சோடு - அல்லது என் மடியோடு - சாய்த்து வைத்திருந்தேன். அப்போது அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கேட்டார்கள். பிறகு என் மடியிலேயே அவர்கள் தளர்ந்து (மரணித்து) விட்டார்கள். அவர்கள் இறந்ததை நான் உணரக்கூட இல்லை. அவ்வாறிருக்க, எப்போது அவர்கள் (அவரிடம்) வஸிய்யத் செய்தார்கள்?’ என்று கேட்டார்கள்.”