இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5282ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ،
عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم ‏.‏ وَزَادَ قَالَ ثَابِتٌ فَسَمِعْتُ أَنَسًا يَقُولُ فَمَا صُنِعَ لِي طَعَامٌ بَعْدُ أَقْدِرُ
عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்தார்.

ஸாபித் அவர்கள் கூடுதலாகக் கூறியதாவது:
நான் அனஸ் (ரழி) அவர்கள், "அதன்பிறகு எனக்காகத் தயாரிக்கப்பட்ட உணவில் பூசணிக்காயைச் சேர்த்துச் சமைக்க என்னால் இயலுமானால், அவ்வாறு சமைக்கப்படாமல் இருந்ததில்லை" என்று கூறுவதைக் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح