சாலிஹ் இப்னு ஹய்யி கூறினார்:
ஒரு மனிதர் ஆமிர் அஷ்-ஷஅபீ அவர்களிடம், "அபூ அம்ர்! ஒருவர் தனது 'உம்மு வலத்'தை (தனக்குக் குழந்தை பெற்ற அடிமைப் பெண்ணை) விடுதலை செய்து, பின்னர் அவளை மணந்துகொண்டால், அவர் தனது குர்பானி ஒட்டகத்தில் சவாரி செய்பவரைப் போன்றவர் என்று நாங்கள் எங்களுக்கிடையே பேசிக்கொள்கிறோம்" என்றார்.
அதற்கு ஆமிர் கூறினார்: அபூ புர்தா அவர்கள் தம் தந்தை (அபூ மூஸா அல்-அஷ்அரீ ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேருக்கு இரண்டு வெகுமதிகள் உண்டு:
வேதக்காரர்களில் ஒருவர், தமது இறைத்தூதரை நம்பி, பின்னர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பினால், அவருக்கு இரண்டு வெகுமதிகள் உண்டு.
ஓர் அடிமை, அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய கடமையையும், தன் எஜமானர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையையும் நிறைவேற்றினால் (அவனுக்கும் இரண்டு வெகுமதிகள் உண்டு).
ஒரு மனிதர், தம்மிடம் ஓர் அடிமைப் பெண் இருக்க, (அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டு), அவளுக்குச் சிறந்த முறையில் ஒழுக்கமும் பண்பும் கற்பித்து, அவளுக்குச் சிறந்த முறையில் கல்வியும் புகட்டி, பின்னர் அவளை விடுதலை செய்து அவளை மணந்துகொண்டால், அவருக்கு இரண்டு வெகுமதிகள் உண்டு."
(பிறகு ஆமிர் அம்மனிதரிடம்), "எந்தக் கைமாறும் இல்லாமலேயே இ(ந்தத் தீர்ப்பான)தை உமக்கு நாம் வழங்கியுள்ளோம். (முன்பெல்லாம்) இதைவிடச் சிறிய விஷயத்திற்காகக்கூட மதீனா வரை பயணம் மேற்கொள்ளப்படுவதுண்டு" என்று கூறினார்.