ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபுல் குஐஸின் சகோதரரும், பால்குடி உறவின்படி என்னுடைய மாமாவுமான அஃப்லஹ் அவர்கள், ஹிஜாப் (திரை) ஏற்படுத்தப்பட்ட பின்னர், வந்து (வீட்டிற்குள் நுழைய) என்னிடம் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் செய்ததை அவர்களிடம் தெரிவித்தேன். (அவர் பால்குடி உறவின்படி என்னுடைய மாமா என்பதால்) அவருக்கு அனுமதி அளிக்குமாறு அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அபுல் குஐஸ் என்பவரின் சகோதரரான அஃப்லஹ், ஹிஜாப் (திரை) சட்டம் அருளப்பட்ட பிறகு, என்னைச் சந்திக்க அனுமதி கேட்டு வந்தார். அவர் எனக்குப் பாலூட்டுதலின் உறவு முறை வழியாகத் தந்தை வழி மாமா ஆவார். (எனவே,) நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் செய்ததைப் பற்றி அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், அவருக்கு அனுமதி வழங்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.