அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்படுவதாக இருந்தால், தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். (ஒருமுறை) அந்தச் சீட்டு எனக்கும் ஹஃப்ஸா (ரழி) அவர்களுக்கும் விழுந்தது. எனவே, நாங்கள் இருவரும் அவருடன் புறப்பட்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்யும்போது ஆயிஷாவுடன் (அதாவது என்னுடன்) பயணம் செய்வார்கள்; அவருடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒருநாள்) ஹஃப்ஸா ஆயிஷாவிடம், "இன்றிரவு நீ என் ஒட்டகத்திலும் நான் உன் ஒட்டகத்திலும் ஏறிக்கொள்ளலாமா? (இதன் மூலம்) நீயும் (புதிய காட்சிகளைப்) பார்க்கலாம்; நானும் பார்க்கலாம்" என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரழி), "சரி" என்றார்.
ஆகவே, ஆயிஷா (ரழி) ஹஃப்ஸாவின் ஒட்டகத்திலும், ஹஃப்ஸா (ரழி) ஆயிஷாவின் ஒட்டகத்திலும் ஏறிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கம் போல்) ஆயிஷாவின் ஒட்டகம் அருகே வந்தார்கள். அதன் மீது ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு சலாம் கூறிவிட்டு, அவருடனே பயணம் செய்தார்கள்; இறுதியில் அவர்கள் (ஓரிடத்தில்) தங்கினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் நபியவர்களைத் தவறவிட்டார்; அதனால் ரோஷமடைந்தார். அவர்கள் தங்கியதும், (ஆயிஷா) தனது கால்களை 'இத்ஹிர்' (எனும் ஒரு வகை வாசனைப்) புற்களுக்கிடையே நுழைத்துக் கொண்டு பின்வருமாறு கூறினார்:
(பொருள்: இறைவா! ஒரு தேளையோ பாம்பையோ என் மீது ஏவி விடு; அது என்னைக் கொட்டட்டும்! (அவர் உன்னுடைய தூதர் என்பதால்) என்னால் அவரிடம் (என் வருத்தத்தை) எதுவும் சொல்ல முடியவில்லை.)