உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"(அந்நியப்) பெண்களிடம் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு) நுழைவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்." அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவரின் உறவினர்கள் குறித்து என்ன (நிலை)?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "கணவரின் உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் (அதாவது, அவர்களுடன் தனித்திருப்பது மரணத்தை ஒத்த ஆபத்தானது)" என்று கூறினார்கள்.