ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் பள்ளிவாசலில் (ஈட்டிப் போர் போன்ற) சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருந்த அபிசீனியர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்குச் சலிப்பு ஏற்படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலாடையால் (பிறர் பார்வை படாதவாறு) என்னை மறைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். எனவே, (இத்தகைய வேடிக்கைகளில்) ஆர்வமிக்க இளம் வயதுச் சிறுமியின் (இயல்பான) நிலையை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்."