இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6844ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ أَبُو بَكْرِ ـ رضى الله عنه ـ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ‏.‏ فَعَاتَبَنِي، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடை மீது தலையை வைத்திருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (என்னிடம்), "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் தடுத்து நிறுத்திவிட்டாய்; (அவர்களிடம்) தண்ணீரும் இல்லை" என்று கூறினார்கள். மேலும் அவர்கள் என்னைக் கண்டித்தார்கள்; தமது கையால் என் விலாப்புறத்தில் குத்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தொடை மீது) இருந்த நிலை மட்டுமே என்னை அசையவிடாமல் தடுத்தது. பின்னர் அல்லாஹ் ‘தயம்மும்’ பற்றிய இறைவசனத்தை அருளினான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح