மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“என் மனைவி என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிறகு, அவளுக்கு ஒரு முறையோ, நூறு முறையோ அல்லது ஆயிரம் முறையோ நான் விருப்பத் தேர்வளிப்பதைப் பற்றி நான் பொருட்படுத்துவதில்லை. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு விருப்பத் தேர்வளித்தார்கள். (அதனால்) அது விவாகரத்தாக ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள்.”