இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5282ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا أَسْوَدَ يُقَالُ لَهُ مُغِيثٌ، عَبْدًا لِبَنِي فُلاَنٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ وَرَاءَهَا فِي سِكَكِ الْمَدِينَةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: பரீரா (ரழி) அவர்களின் கணவர், பனூ இன்னாருடைய அடிமையான முகீத் என்றழைக்கப்பட்ட ஒரு கறுப்பின அடிமையாக இருந்தார். (அவர் பரீராவை மிகவும் நேசித்ததால், அவள் தன்னை விவாகரத்து செய்த பிறகும்கூட) அவரை நான் (இப்பொழுதும்) மதீனாவின் தெருக்களில் பரீரா (ரழி) அவர்களுக்குப் பின்னால் (அவளைத் தேடி, அவளிடம் மன்றாடியவாறு) நடந்து செல்வதைக் காண்பது போன்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح