ஸைனப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் மகள்.) என் தாயார் (உம்மு ஸலமா (ரழி) அவர்கள்) கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! அபூ ஸலமா (ரழி) அவர்களின் பிள்ளைகளுக்காக (அதாவது என் மாற்றாந்தாய் பிள்ளைகளுக்காக) நான் செலவழித்தால் எனக்கு நன்மை கிடைக்குமா? உண்மையில் அவர்களும் என் பிள்ளைகள்தாமே (நான் அவர்களை என் சொந்தப் பிள்ளைகளாகவே கருதுகிறேன்)?" நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், "அவர்களுக்காகச் செலவிடுங்கள், நீங்கள் அவர்களுக்காகச் செலவழித்ததற்கான நன்மையை நீங்கள் பெறுவீர்கள்."
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்காக நான் செலவு செய்தால் எனக்கு நற்கூலி உண்டா? அவர்களை நான் இப்படியே (கவனிக்காமல், ஆதரவற்ற நிலையில்) விட்டுவிட மாட்டேன்; அவர்கள் என் பிள்ளைகள்தானே!" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களுக்காக நீ செலவு செய்வதற்கு உனக்கு நற்கூலி உண்டு" என்று கூறினார்கள்.
وعن أم سلمة رضي الله عنها قالت: قلت يارسول الله، هل لي أجر في بني أبي سلمة أن أنفق عليهم، ولست بتاركتهم هكذا وهكذا إنما هم بني؟ فقال: نعم لك أجر ما أنفقت عليهم ((متفق عليه)).
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவு செய்தால் எனக்கு நற்கூலி உண்டா? (ஏனெனில்) அவர்களை நான் (அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக, கவனிப்பாரற்று) இங்கேயும் அங்கேயுமாக விட்டுவிட மாட்டேன்; நிச்சயமாக அவர்கள் என் பிள்ளைகள்தாமே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அவர்களுக்காக நீங்கள் செலவு செய்வதற்கு உங்களுக்கு நற்கூலி உண்டு” என்று கூறினார்கள்.