حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَذْكُرُ ـ أُرَاهُ ـ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ ـ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَلاَّ خَمَّرْتَهُ، وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا . وَحَدَّثَنِي أَبُو سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஹுமைத் (ரழி) என்ற அன்சாரி மனிதர் அந்நகீ எனும் இடத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு கிண்ணம் பால் கொண்டு வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதன் மீது ஒரு குச்சியையாவது குறுக்காக வைத்தாவது நீங்கள் அதை மூட மாட்டீர்களா?" என்று கூறினார்கள்.
நான் 'நக்கீஃ' என்ற இடத்திலிருந்து மூடப்படாத ஒரு பாத்திரத்தில் பாலுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், "இதை நீ மூடியிருக்கக் கூடாதா? இதன் குறுக்கே ஒரு குச்சியையாவது வைத்திருக்கலாமே!" என்று கூறினார்கள். மேலும் அபூ ஹுமைத் (ரழி), "இரவில் தண்ணீர்ப் பைகளைச் சுருக்கிக் கட்டிவைக்குமாறும், இரவில் கதவுகளைப் பூட்டிவைக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூ ஹுமைத் என்று அழைக்கப்படும் ஒருவர், 'அந்நகீஃ' என்ற இடத்திலிருந்து ஒரு குவளைப் பாலைக் கொண்டு வந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ இதை மூடியிருக்கக் கூடாதா? இதன் குறுக்கே ஒரு குச்சியையாவது வைத்திருக்கலாமே!" என்று கேட்டார்கள்.