ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஸ்லிமுக்கு எந்த ஒரு துன்பம் நேர்ந்தாலும், அது அவருக்குப் பாவங்களுக்குப் பரிகாரமாகவே அமைகிறது; ஒரு முள் குத்துவதாக இருந்தாலும் சரியே (அதாவது, சிறிய துன்பம்கூட பாவங்களை நீக்கும்).”