ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள், (நோயுற்றிருந்த) முகன்னஃ என்பவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். பின்னர், (அவரிடம்) "நீங்கள் ஹிஜாமா செய்துகொள்ளாத வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். ஏனெனில், 'நிச்சயமாக அதில் நிவாரணம் இருக்கிறது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.