حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ بِلَحْىِ جَمَلٍ فِي وَسَطِ رَأْسِهِ.
இப்னு புஹைனா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில், லிஹ்யா-ஜமல் என்ற இடத்தில் அவர்களின் தலையின் நடுப்பகுதியில் ஹிஜாமா செய்துகொண்டார்கள்.
அப்துல்லாஹ் பின் புஹைனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் உள்ள லஹ்யி ஜமல் என்ற இடத்தில், இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் தங்களின் தலையின் நடுவில் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை செய்துகொண்டார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ، يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِلَحْىِ جَمَلٍ وَهُوَ مُحْرِمٌ وَسْطَ رَأْسِهِ .
அப்துர்-ரஹ்மான் அல்-அஃரஜ் கூறினார்:
"அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரழி) அவர்கள் கூற நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹ்ரிமாக இருந்த நிலையில், அவர்களின் தலையின் நடுப்பகுதியில், லஹ்யி ஜமல்* என்ற இடத்தில் இரத்தம் குத்தி எடுக்கப்பட்டார்கள்.'"