நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் என்னிடம், "உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி, இரவின் இருளில் மறையும் வரை நடந்து சென்றார்கள் (இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக). பிறகு வந்தார்கள். நான் பாத்திரத்திலிருந்து அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அவர்கள் மீது கம்பளியாலான ஓர் அங்கி இருந்தது. அதிலிருந்து தமது முன்னங்கைகளை அவர்களால் வெளியே எடுக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் அங்கியின் அடிப்பாகத்திலிருந்து அவ்விரண்டையும் வெளியே எடுத்து, தமது முன்னங்கைகளைக் கழுவி, தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகளைக் கழற்றுவதற்காகக் குனிந்தேன். அதற்கு அவர்கள், "அவ்விரண்டையும் விட்டுவிடு! ஏனெனில், நான் அவ்விரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்தேன்" என்று கூறி, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.
முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக:
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், "பெண்ணுக்கும் இவ்வாறு (நீர் வெளியேற்றம்) நிகழுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். (பெண்ணின் நீர் வெளியேற்றம்) அவ்வாறு இல்லையெனில், குழந்தைக்குத் தாயின் சாயல் எங்கிருந்து வருகிறது?" என்று கூறினார்கள்.