حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ " فَبَكَى.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ், உனக்கு ‘லம் யகுனில் லதீன கஃபரூ’ (எனும் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை (ரழி) அவர்கள், "அவன் (அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். உடனே உபை (ரழி) (மகிழ்ச்சியால்) அழுதார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ. " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ ". فَبَكَى.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபையி (பின் கஅப்) (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ் எனக்கு, உமக்கு 'லம் யகுனில் லதீன கஃபரூ' (எனும் அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி கட்டளையிட்டான்." உபையி (ரழி) அவர்கள், "(அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். ஆகவே, உபையி (ரழி) அழுதார்கள்.