அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள் அல்லது ஒரு கடிதம் எழுத எண்ணினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் (ஆட்சியாளர்கள்) கடிதங்கள் முத்திரையிடப்படாவிட்டால் படிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. எனவே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்துகொண்டார்கள், அதில் "முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" என்று பொறிக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கையில் அதன் வெண்மையான பளபளப்பை நான் இப்பொழுதும் கண்ணால் காண்பது போன்று இருக்கிறது. நான் கத்தாதாவிடம், "அதன் பொறிப்பு 'முஹம்மது அல்லாஹ்வின் தூதர்' என்று கூறியது யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அனஸ் (ரழி) அவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ أَنْ يَكُونَ مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ரோமர்களுக்கு ஒரு கடிதம் எழுத நாடியபோது, "முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் அவர்கள் படிக்க மாட்டார்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து கொண்டார்கள். அதன் வெண்மையை அவர்களது கையில் நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது. மேலும் அதில் "முஹம்மது ரசூலுல்லாஹ்" (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று பொறித்தார்கள்.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا. فَاتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ரோமர்களுக்குக் கடிதம் எழுத நாடியபோது, "முத்திரையிடப்பட்டிருந்தாலன்றி அவர்கள் எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள்" என்று (நபித்தோழர்களால்) கூறப்பட்டது. எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்துகொண்டார்கள். அதன் பளபளப்பை நான் (இப்போதும்) பார்ப்பது போன்றுள்ளது. மேலும், அதில் 'முஹம்மது ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று பொறிக்கப்பட்டிருந்தது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا
شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ - قَالَ - قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا . قَالَ
فَاتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமர்களுக்கு (பைசாந்தியர்களுக்கு) கடிதம் எழுத நாடியபோது, "முத்திரையிடப்பட்டிருந்தாலன்றி அவர்கள் கடிதத்தைப் படிக்க மாட்டார்கள்" என்று (தோழர்கள்) கூறினர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைச் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் அதன் வெண்மையை நான் பார்ப்பது போன்றுள்ளது. அதன் பொறிப்பு "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்பதாக இருந்தது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பினார்கள், மேலும் அவர்கள் (நபித்தோழர்கள்) கூறினார்கள்: 'அவர்கள் முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் வாசிக்க மாட்டார்கள்.' எனவே, அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தை எடுத்துக்கொண்டார்கள், அவர்களுடைய கையில் அதன் வெண்மையை நான் பார்ப்பது போல இருக்கிறது, மேலும் அதில் 'முஹம்மத் ரஸூல் அல்லாஹ்' என்று பொறிக்கப்பட்டிருந்தது."