அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு இரகசியத்தைச் சொன்னார்கள். அதற்குப் பிறகு நான் அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. மேலும், உம்மு சுலைம் (ரழி) அவர்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள்; அப்போதும் நான் அதை அவரிடம் தெரிவிக்கவில்லை (ஏனெனில் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்த இரகசியம்)."