حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ طَفِقْتُ أَنْفِثُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، الَّتِي كَانَ يَنْفِثُ، وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْهُ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும்போதெல்லாம் 'அல்முஅவ்விதாத்' (பாதுகாவல் கோரும்) அத்தியாயங்களை ஓதித் தம்மீது ஊதிக் கொள்வார்கள்; மேலும் தம் கரத்தால் தங்களைத் தடவிக் கொள்வார்கள். அவர்கள் மரணத்தைத் தழுவும்படியான நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் (வழமையாக) ஊதி வந்த அதே 'அல்முஅவ்விதாத்' அத்தியாயங்களை நான் ஓதி அவர்கள் மீது ஊதத் தொடங்கினேன். மேலும், நபி (ஸல்) அவர்களின் கரத்தைக் கொண்டே அவர்கள் மீது தடவி வந்தேன்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றபோதெல்லாம், முஅவ்விதாத் (சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன் நாஸ்) ஓதி, பின்னர் தம் உடலில் ஊதுவார்கள். அவர்கள் கடுமையாக நோயுற்றபோது, நான் (இந்த இரண்டு சூராக்களையும்) ஓதி, அதன் பரக்கத்தை நாடி, அவர்களுடைய கைகளை அவர்களுடைய உடம்பில் தடவி விடுவேன்.
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، وَسَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ وَقَرَأَ بِالْمُعَوِّذَتَيْنِ وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போதெல்லாம், தங்களின் கைகளில் ஊதி, அல்-முஅவ்விததைனை ஓதி, பிறகு தங்கள் கைகளால் தங்கள் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள்.